சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா....!

சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா....!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2988 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2986 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

குறித்த இருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2842 ஆக காணப்படுகின்றது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 134 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்தது.