டிக்டொக் தொடர்பில் வெளியான தகவல்....!
டிக்டொக் ஏப்பினை கொள்வனவு செய்ய அமெரிக்காவின் மைக்ரோசொப்ட் நிறுவனம் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
டிக்டொக் ஏப் இனை அமெரிக்காவிற்கு செயற்படுத்த அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குமாறு அமெரிக்க அரசாங்கம் அறிவித்ததோடு அதற்கு 90 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் இயங்கும் பல முன்னணி நிறுவனங்கள் அதற்கு விண்ணப்பித்ததிருந்த நிலையில், மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரெக்கல் நிறுவனம் அதனை கொள்வனவு செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தை விட அதிக முதல் கொடுத்து இதனை கொள்வனவு செய்ய ஒரெக்கல் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.