கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டார் இத்தாலியின் முன்னாள் ஜனாதிபதி!

கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டார் இத்தாலியின் முன்னாள் ஜனாதிபதி!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, தற்போது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெர்லுஸ், வைரஸ் பாதிப்பால் மிகவும் ஆபத்தான வயது நிலையை கொண்டவர் பட்டியலில் இருந்தார்.

தற்போது, மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 83 வயதான சில்வியோ பெர்லுஸ்கோனி ‘மிகவும் ஆபத்தான சவாலில் தப்பித்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

சர்டினியா தீவுகளுக்கு சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்த போது, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெர்லுஸ்கோனி, கடந்த 3ஆம் திகதி லேசான காய்ச்சலுடன் மிலனின் சான் ரஃபேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பெர்லுஸ்கோனிக்கான மருத்துவ சிகிச்சையின் போது, அவருக்கு இரட்டை நுரையீரல் அழற்சி ஆரம்ப கட்டங்களில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

கோடீஸ்வரரான சில்வியோ பெர்லஸ் கோனி, கடந்த 1994ஆம் ஆண்டில் இத்தாலியின் பிரதமரானார். அதைத் தொடர்ந்து 4 முறை அந்நாட்டின் பிரதமராக செயற்பட்டுள்ளார்.

இவர் தற்போது தேசிய அளவிலான தனது பங்கை குறைத்துக்கொண்டு உள்ளூர் அரசியலில் தனது கட்சியினருக்கு ஆதரவளித்து வருகிறார்.