
16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தடை
அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தொழிலாளர்களின் குறைந்தபட்ச வயதெல்லையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி இதுவரையில் 14 வயதாக காணப்பட்ட வயதெல்லையை தற்போது 16ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு (World Day Against Child Labour ) அமைவாக ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளை (12) முன்னிட்டு கருத்து வெளியிட்ட அமைச்சர், எதிர்வரும் 2022 வருடத்திற்குள் சிறுவர் தொழிலாளர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதும், பொருத்தமான வயதில் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திறன்கள் உள்ளிட்ட சரியான அணுகுமுறையை வளர்ப்பதும் தமது பொறுப்பு என்றும் அமைச்சர் தினேஸ் குணவர்தன இதன்போது குறிப்பிட்டார்.