
யாழில் வீசிய கடும் சுழல் காற்று
யாழில் இன்று வீசிய கடும் சுழல் காற்றினால் பலரது வீடுகளும் சொத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதில் செம்பியன் பற்று தெற்கை சேர்ந்த சிவநாதன் என்பவரது வீட்டு மதில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.
அத்துடன் தென்னை மரங்கள் வாழை மரங்கள் காற்றினால் நாசமாகியுள்ளதுடன், வீட்டுக் கூரையும் பகுதியளவில் சேதமாகியுள்ளன.
குறித்த சம்பவத்தை நேரில் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அரியகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்