
இராணுவத் தளபதி இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
மினுவாங்கொடை, திவுலபிட்டிய மற்றும் வெயாங்கொடை ஆகிய பிரதேசங்களுக்கு கடந்த 7 நாட்களுக்குள் சென்றுவந்த நிலையில், யாருக்கேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தால் உடன் வைத்தியரை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.