
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புதிய மாணவர்களுக்கான பதிவுகள் ஒத்திவைப்பு!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 2020 - 2021 கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களின் பதிவுகள் செவ்வாய்கிழமை (6) நடைபெற இருந்த போதிலும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பதிவுகள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் அறிவித்துள்ளார்.
கம்பஹா மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் 39 வயதுடைய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
இந்நிலையில் நேற்றைய தினம் ஸ்ரீலங்காவிலுள்ள அரச, தனியார் பாடசாலைகளுக்கு 2ஆம் தவணைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டிந்தது.
அத்துடன் நிலையில் களனி பல்கலைக்கழகம் மற்றும் யக்கலையில் உள்ள கம்பஹா விக்ரம ஆராச்சி ஆயுர்வேத நிறுவனம் ஆகியவை ஒரு வார காலத்திற்கு மூடப்படும் எனவும் மாணவர்கள் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க நேற்று அவசர கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.