கொவிட்-19: பிரித்தானியாவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 14ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கொவிட்-19: பிரித்தானியாவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 14ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 14ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால் 14ஆயிரத்து 162பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 70பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக ஐந்து இலட்சத்து 44ஆயிரத்து 275பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 42ஆயிரத்து 515பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள 410பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.