இராணுவ தளபதியின் புதல்வருக்கு மேஜர் ஜெனரல் பதவி வழங்கிய ஜனாதிபதி

இராணுவ தளபதியின் புதல்வருக்கு மேஜர் ஜெனரல் பதவி வழங்கிய ஜனாதிபதி

ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி ஹெமில்டன் வனசிங்கவின் புதல்வருக்கு மேஜர் ஜெனரல் பதவி உயர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் முப்படையின் தளபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ ஹெமில்டன் வனசிங்கவின் புதல்வர் டப்ளியூ.ஏ.எஸ் சஞ்சய வனசிங்கவுக்கு மேஜர் ஜெனரல் பதவி உயர்வை வழங்கியுள்ளார்.

சஞ்சய வனசிங்க தனது தந்தை ஹெமில்டன் வனசிங்க இராணுவ தளபதியாக பதவி வகித்த போதே இராணுவத்தில் இணைந்துக்கொண்டவர்.

இதேவேளை சஞ்சய வனசிங்கவுக்கு இராணுவத்தில் இணைந்துக்கொண்டமைக்கான உத்தியோகபூர்வ நியமனத்தையும் அவரது தந்தையே வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் முன்னாள் இராணுவ தளபதி ஒருவரின் புதல்வர் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.