
யாழ். பல்கலை மோதல் தொடர்பில் விசாரிக்க தனி நபர் ஆயம்
யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்காக தனிநபர் விசாரணை ஆயம் நியமனம் இடம்பெற்றுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை கூடிய விசேட பேரவைக் கூட்டத்தில் வைத்து இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் எம். நடராஜசுந்தரம் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகப் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.