கொழும்பு-சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் தாதி ஒருவருக்கு கொரோனா..!
பொரளை - சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைவாக அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதாக கொழும்பு மாநாகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் பொலனறுவையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
பொரளை - சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 5 மாத குழந்தை ஒன்றின் தந்தைக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுறுதியானது.
இந்த நிலையில், அவருடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் குறித்த குழந்தை அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.
இந்தநிலையில், குறித்த குழந்தை சிகிச்சை பெறும் நோயாளர் அறையில் ஊழியராக சேவையில் ஈடுப்பட்டிருந்த அந்த பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதாக கொழும்பு மாநாகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.