
காரைதீவு மக்களுக்கு வைத்திய அதிகாரி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
கம்பஹா மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஊழியர்கள் இருவர் பயணித்த பேருந்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இருவர் பயணித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஜீவராணி சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இவர் கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அரச பேருந்தில் கடந்த 3ஆம் திகதி பிற்பகல் பயணித்துள்ளார்.
காரைத்தீவைச் சேர்ந்த இவர்கள் NB 9701 என்ற இலக்கமுடைய பஸ்ஸில் பயணித்துள்ளதாகவும், அவர்கள் தொடர்பான விபரம் தெரிந்தால் உடனடியாக தெரியப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரம் குறிந்த பேருந்தில் பயணித்த தெஹியத்த கண்டியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.