உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படும் ஆபத்தை புறந்தள்ள முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பல தினங்களாக தினமும் உலகம் முழுவதும் லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையே இதற்கு காரணம்.

அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவது உச்சமட்டத்தில் இருப்பான் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டமை குறித்து உலக சுகாதார அமைப்பு கூடிய கவனத்தை செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.