தொடரும் அபாயம்! கம்பஹாவில் மேலும் பல பிரதேசங்கள் முடக்கம்

தொடரும் அபாயம்! கம்பஹாவில் மேலும் பல பிரதேசங்கள் முடக்கம்

கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாலிக்காதென, எலுவாபிட்டிய மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகள் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்டவர்கள் ஏனைய பகுதிகளுக்கு வெளிச்செல்லவும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.