மன்னாரில் தனிமைப்படுத்தலில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவர் த.சத்தியமூர்த்தி

மன்னாரில் தனிமைப்படுத்தலில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவர் த.சத்தியமூர்த்தி

மன்னாரில் தனிமைப்படுத்தலில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதை தெரிவித்துள்ளார். வட மாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 243 பேருக்கான கொரோனா பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே மன்னாரில் தனிமைப்படுத்தலில் இருந்த 3 பேருக்கு தொற்று இருது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை மன்னார் பட்டித்தோட்டம் மற்றும் பெரிய கடை கிராமம் ஆகியவை 24 மணி நேரம் முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார்.