பொலன்னறுவையில் திடீரென கொத்துக் கொத்தாக இறக்கும் காகங்கள்! அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்
பொலன்னறுவை மாவட்டத்தில் திடீரென கொத்துக் கொத்தாக காகங்கள் இறந்து விழுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலன்னறுவை- மன்னம்பிட்டி, வெலிகந்தை, நெலும்வெவ கிராமங்களில் நேற்று காலை முதல் மரங்களிலிருந்து காகங்கள் கெத்து கெத்தாக இறந்து விழுவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டமாக இறக்கும் காகங்கள் பிரதேசத்தில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதாகவும் மரணிக்கும் தருவாயில் இருக்கும் காகங்களுக்கு கிராம மக்கள் தேங்காய்ப் பால் கொடுத்து காப்பாற்ற முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இச் சம்பவமானது அப் பிரதேச மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காகங்கள் இறப்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் இது குறித்து பிரதேச செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மரங்களில் இருக்கும் காகங்கள் திடீரென இறந்து விழுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவித்து துரிதமான விசாரணைகளை நடத்தவுள்ளதாக, வெலிகந்தை பிரதேச செயலாளர் ஹைரு நிஷா தெரிவித்துள்ளார்.