
லண்டனில் பரிதாபமாக பலியான இலங்கைச் சிறுவன்
வவுனியா - கோவில்குஞ்சுக்குளத்தை பூர்வீகமாகக் கொண்டு லண்டனில் வசித்து வந்த சிறுவன் ஒருவன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சசிகரன் அகர்வின் (வயது 4) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரிய வருகையில், ஐக்கிய இராச்சியத்தின் கேய்ஸ் பகுதியில் வசித்து வந்த இவர், நேற்று(11) இரவு தனது தாயுடன் நகர்ப்பகுதிக்கு சென்றவேளை வீதியில் வேகமாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.