
பொதுமக்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய தகவல்
பொதுப்போக்குவரத்தின் போது ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா தெரிவித்துள்ளார்.
போக்குவரத்தின் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
கொரோனா அச்சம் காரணமாக பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைகளுக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தனியார் பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுதொடர்பில் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.