
பிரித்தானிய மக்கள் இனி ஸ்கொட்லாந்துக்கு செல்லத் தடை
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் இடங்களில் இருக்கும் மக்கள் ஸ்கொட்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பிரித்தானியாவின் மற்ற நாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இங்கிலாந்து அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என வேல்ஸ் முதலமைச்சர் Mark Drakeford's அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள ஆபத்தான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஸ்கொட்லாந்திற்குப் பயணம் செய்ய வேண்டாம் என நிக்கோலா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவசர பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதுவதாக அவர் கூறினார்.
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய 4 நாடுகளை இணைந்து உள்ளடக்கியது தான் பிரத்தானியா என்பது குறிப்பிடத்தக்கது.