
புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க ஜப்பான் முடிவு!
பேரழிவுகரமான புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த மாதத்திற்குள் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என ஜப்பானிய ஊடகங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளன.
டோக்கியோ எலக்ட்ரிக் பவர் (Tokyo Electric Power Company) நிறுவனம் 2011 மார்ச்சில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் புகுஷிமா டாயிச்சி அணுமின் நிலையம் முடங்கியதில் இருந்து ஒரு மில்லியன் தொன்களுக்கும் அதிகமான அசுத்தமான தண்ணீரை சேகரித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஜப்பானிய தொழில்துறை அமைச்சர் ஹிரோஷி கஜியாமா தெரிவித்துள்ளதுடன் விரைவில் கதிரியக் நீரை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், புகுஷிமா டாயிச்சி ஆலையை நிறுத்துவது என்பது புகுஷிமா அணுசக்தி பேரழிவிலிருந்து மீள்வதற்கான முக்கிய முன்மாதிரியாகும் எனவும் அதன் செயற்பாட்டை நிறுத்துவதில் ஏற்படும் தாமதம் குறித்து விரைவி ஒரு முடிவை எடுக்க வேண்டும் அவர் ஊடக மாநாட்டில் கூறியுள்ளார்.
புகுஷிமா ஆணுமின் நிலையத்தில் சேகரிகப்பட்டுள்ள அசுத்தமான நீரை கடலுக்குள் விடுவதில் சில எதிர்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக, ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வடக்கு கோடையில் டோக்கியோவில் நடைபெறவுள்ளதால் சில நிகழ்வுகள் குறித்த ஆலையிலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவிலேயே நடக்கிறது. இதனால் அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கவலை எழுந்துள்ளது.
மேலும், கழிவு நீரை கடலில் கலப்பது ஜப்பானிய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அண்டை நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம், ஜப்பானிய மீன்பிடித் துறை பிரதிநிதிகள் கதிரியக்க நீரை கடலுக்குள் விட அனுமதிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அணுசக்தி பேரழிவிற்குப் பின்னர் புகுஷிமா பிராந்தியத்தில் இருந்து கடல் உணவு இறக்குமதிக்கு தென்கொரியா விதித்த தடை தொடர்கிறது. இந்நிலையில், தென்கொரியாகதிரியக்க நீர் கையாள்கை குறித்து ஜப்பானிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்த சூழலில், இவ்வாண்டு தொடக்கத்தில், அணுசக்தி ஆலையில் இருந்து கதிரியக்க நீரை வெளியேற்றுவது குறித்து ஜப்பான் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு, அதை கடலில் விடுவிக்க பரிந்துரைத்தது.
இதையடுத்து, ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஏப்ரல் முதல் மீன்வள பிரதிநிதிகள் உட்பட பல்வேறு கட்சிகளிடமிருந்து கருத்துக்களைக் கேட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஜப்பான் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.