
திரைப்படம் வெளியாகிய பின் எல்லோருக்கும் புரியும் - முரளி அதிரடி பேட்டி
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகவிருக்கும் நிலையில் அதற்கான முதல் போஸ்டர் வெளியானதையடுத்து பெரும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் திரைப்படம் வெளியாகிய பின்பு எல்லோருக்கும் புரியும் என முத்தையா முரளிதரன் அதிரடியான பதிலை வழங்கியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
என்னுடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையினை திரைப்படமாக தயாரிப்பது குறித்து ஏற்கனவே என்னிடம் பேசி இருந்தார்கள். அதன் பின்னரே தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இருப்பினும் நான் கடந்த காலத்தில் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று தெரிவித்திருந்தேன். அதன் பிரதிபலிப்பாகவே இந்த எதிர்ப்புக்கள் வருகிறது.
நான் கூறியது தான் உண்மையும் கூட, நான் முதலில் இலங்கையர் - அதன் பின்னர் தான் தமிழன்.
எனக்கு அரசியலில் ஈடுபட எவ்வித விருப்பமும் இல்லை. ஆனால், சில அரசியல்வாதிகளுக்கும் சில ஊடகங்களுக்கும் என்னை பிடிக்கவில்லை என நினைக்கிறேன்.
நாம் ஒரு இலங்கையராக அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.