வடக்கில் இரவு பகல் பாராது திடீரென பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

வடக்கில் இரவு பகல் பாராது திடீரென பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

எந்தவொரு காரணத்திற்காகவும் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்க வேண்டாம் என அனைத்து சட்டவிரோத குடியேறிகளுக்கும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அண்மையில் பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியதை அடுத்து சிலர் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்லத் தயாராகி வருவதாக தகவல் வெளிவந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அத்துடன் ஒன்லைனில் விழிப்புணர்வை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை வடக்கில் பல பகுதிகளில் இரவு பகலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் கடல் எல்லையை மீறும் எவரும் முன்னறிவிப்பின்றி சர்வதேச கடற்பரப்புக்கு திருப்பி விடப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.