
முன்னாள் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் வாகனத்தில் கடத்தப்பட்ட இளைஞன்? நீதிமன்றின் அறிவிப்பு!
ஸ்ரீலங்கா நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அழைப்பாணை விடுத்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞன் ஒருவனை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பாகவே ஹிருணிகா பிரேமசந்திரவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன அழைப்பாணை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருணிக்காவுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. அந்த சம்பவம் தொடர்பாகவே எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.