
இந்திய - சீன மோதல் தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபை விடுத்துள்ள எச்சரிக்கை!
அண்மைக் காலமாக நிலவி வரும் இந்திய - சீன எல்லைப் பிரச்சினை தொடர்பில் தீவிர கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழலால் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன இராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது.
இதனால் இருதரப்பிலும் உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டுள்ளனர்.மோதல் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபையின் அதிகாரி கருத்து வெளியிடுகையில்,
இந்திய - சீன எல்லைப் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் உயிரிழப்புகள் கவலை அளிக்கிறது. இரு நாடுகளும் உச்சக்கட்ட கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இருநாடுகளும் தங்களது படைகளை எல்லைப்பகுதியில் இருந்து விலக்கிக்கொண்டதை நிலைமையின் தீவிரம் குறைவதற்கான நல்ல அறிகுறியாக பார்க்கிறோமென அவர் தெரிவித்துள்ளார்.