5 பேர் குளவி கொட்டுக்கு இலக்கு
பொகவந்தலாவ லின்போட் மற்றும் கொட்டியாகலை என்.சி. ஆகிய பெருந்தோட்டங்களை சேர்ந்த 5 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகினர். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. லின்போட் தோட்டபகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த 3 ஆண்களும் என்.சி.தோட்டபகுதியில் இரண்டு பேரும் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக எமது செய்தி தெடர்பாளர் தெரிவித்துள்ளார். குளவி கொட்டுக்கு இலக்கான அனைவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.