மீண்டும் அமைச்சராக நினைக்கும் முன்னாள் ஜனாதிபதி (காணொளி)
ஜனாதிபதியாக கடமையாற்றிய தமக்கு அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிரு செய்திப்பிரிவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமது கட்சயில் பலரின் வேண்டுகோளுக்கு அமைய தான் பொதுத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக தெரவித்த அவர், பொதுத்தேர்தலில் வெற்றியீட்டுவது தனக்கு சவாலான விடயம் அல்லவெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொலனறுவையில் ஐக்கிய தேசிய கட்சியை சாராத அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர், தான் அரசியலுக்கு கொண்டுவந்த குழந்தைகள் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார். தன் மீது குற்றம் சுமத்திவரும் பலரும் மோசடி மற்றும் திருடர்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். அத்தோடு, இவர்கள் அனைவரின் முகமூடிகளையும் தன்னால் அகற்ற முடியுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.