
வவுனியாவில் இடம்பெற்ற அனர்த்தம் - ஒரு பிள்ளையின் தாயார் பலி
வவுனியா செட்டிகுளம் - கங்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரு பிள்ளையின் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த விஜயா (24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், நேற்று முன்தினம் அவரது வீட்டில் தவறுதலாக தீ பரவியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், அவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.