
ஹெரோயின் கொண்டு சென்ற பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!
கடந்த 2013 ஆம் ஆண்டு 3.6 கிராம் ஹெரோயின் ரக போதைபொருள் சிறைச்சாலை உள்ளே கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராய்ச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபரான பெண் தொடர்ந்தும் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.