
நாட்டில் மேலும் 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்தியா – சென்னையில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1921 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் 513 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர் என்றும் 1397 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.