
ஆபரேஷன் “நகம்கழுகு”! இடைவிடாத தாக்குதல்கள்! தகர்த்தெறியப்பட்ட படை முகாம்கள்
துருக்கி மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் குர்து படைகள் உள்ளிட்ட பயங்கர அமைப்புகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் இராணுவம் அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் குர்து போராளிகளின் 81 நிலைகள் நிர்மூலமாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படைகளின் இடைவிடாத தாக்குதல்களினால் பயங்கரவாதிகளின் நிலைகள் தகர்க்கப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது.