தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கைது..!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கைது..!

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 16 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி முதல் இதுவரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.