
பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை
கொரோனா தொற்றால் மூடப்பட்ட பாடசாலைகள் ஜூன் 29 முதல் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார், கொழும்பு தீயணைப்பு படை மற்றும் கொழும்பு மாநகரசபை ஆகியவை நகரத்தில் உள்ள பாடசாலைகளை தூய்மைப்படுத்துதல் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை தொடங்கின.
நாட்டில் COVID-19 வெடித்ததைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர் பள்ளிகள் இந்த மாத இறுதியில் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.