பஸ்களில் செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

பஸ்களில் செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

பொதுமக்கள் தாம் பயணிக்கும் பொது போக்குவரத்து பஸ்களின் இலக்கத்தை குறித்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிலவேளைகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான ஒருவர் பொது போக்குவரத்தில் பயணித்திருந்தால் அந்த நபரை இனங்காண்பது மற்றும் அவர் தொடர்பில் தகவல்களை வெளியிடுவது போன்ற விடயங்களுக்கு மேற்படி இலக்கங்களை குறித்து வைத்துக்ெகாள்வது பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேலியகொடை பொது மீன் சந்தை பகுதியில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளில் பலர் பொது போக்குவரத்து பஸ்களில் பயணித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதனை கருத்திற்கொண்டே மேற்படி அறிவித்தலை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகள் மற்றும் தனியார் பஸ் வண்டிகளின் உரிமையாளர்கள் தமது பஸ் வண்டியின் இலக்கத் தகட்டை தெளிவாக காட்சிப்படுத்துமாறும் அந்த இலக்கத்தை பஸ் வண்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் காட்சிப்படுத்துமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்படுவோர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.