
பரீட்சையில் ஆள்மாறாட்டம்! மைத்துனருக்காக பரீட்சை எழுத வந்த இளைஞர் சிக்கினார்
க.பொ.த. உயர்தர பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அரசியல் விஞ்ஞான பாட பரீட்சையில் தனது மைத்துனருக்காக பரீட்சை எழுத வந்த பாலாவி கரம்பை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே பிடிபட்டுள்ளார்.
காலி, கிங்தோட பகுதியைச் சேர்ந்த ஒருவர் க.பொ.த. உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பித்திருந்தார்.
அவருக்கு கல்பிட்டி நிர்மல மாதா மகாவித்தியாலயம் பரீட்சை நிலையமாக கிடைக்கப் பெற்றிருந்தது.
குறித்த நபருக்கு பதிலாக வேறொருவர் பரீட்சைக்குத் தோற்றியிருப்பதை பரீட்சை மேற்பார்வையாளர் அடையாளம் கண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆள்மாறாடத்தில் ஈடுபட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.