தாய் மற்றும் மகனை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை..

தாய் மற்றும் மகனை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை..

பெண் ஒருவர் மற்றும்  சிறுவன் ஒருவனை  கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹசலக்க - உல்பதகம பிரதேசத்தினை சேர்ந்த 45 வயதுடைய நபருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கம்பஹா பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடைய தாய் மற்றும் 4வயதுடைய மகனை கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2003 ஆம் ஆண்டு மே மாத கால பகுதியில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் 17 வருடங்களின் பின்னர் குறித்த நபருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.