
யாழ்.வல்வெட்டித்துறையில் 63.9 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 213 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் பருத்தித்துறை, உடுத்துறை மற்றும் ஆழியவளைப் பகுதிகளை சேர்ந்த 36 மற்றும் 41 வயதுடைய இரு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வல்லெட்டித்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 98 பொதிகளில் 213 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவை 63.69 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.