ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரசார குழு முன்வைத்த கோரிக்கையை, நீதிமன்றம் நிராகரித்துள்ளது...!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரசார குழு முன்வைத்த கோரிக்கையை, நீதிமன்றம் நிராகரித்துள்ளது...!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், 6 மாநிலங்களின் முடிவுகள் இதுவரையில் வெளியிடப்படாதுள்ளமை காரணமாக, இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தேர்தல் குழுவில் 20 ஆசனங்களைக் கொண்ட பென்சில்வேனியா, 15 ஆசனங்களைக் கொண்ட வடக்கு கரோலினா, 15 ஆசனங்களைக் கொண்ட ஜோர்ஜியா, 11 ஆசனங்களைக் கொண்ட அரிசோனா, 6 ஆசனங்களைக் கொண்ட நிவாடா, 3 ஆசனங்களைக் கொண்ட அலஸ்கா முதலான மாநிலங்களின் முடிவுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எனினும், அமெரிக்காவில் மொத்தமாக உள்ள 50 மாநிலங்களில் இதுவரையில் வெளியிடப்பட்டுள்ள 44 மாநிலங்களின் முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் இதுவரையில் 253 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 214 ஆசனங்களை கைப்பற்றியுள்ளார்.

பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணிக்கையை இடைநிறுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரசார குழு முன்வைத்த கோரிக்கையை, அந்த மாநில நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தங்களின் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று ட்ரம்ப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, குடியரசு கட்சியினர், மட்டுமின்றி ஜனநாயக கட்சியினரும் வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் பகுதிக்குள் செல்லவில்லை என்று குறிப்பிட்டதுடன், அந்தக் கோரிகையையும் நிராகரித்துள்ளார்.