ஹொங்கொங் குறித்த தேசிய பாதுகாப்பு சட்டம் சீன நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

ஹொங்கொங் குறித்த தேசிய பாதுகாப்பு சட்டம் சீன நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

ஹொங்கொங்  தொடர்பான சர்ச்சைக்குரியதேசிய பாதுகாப்பு சட்டம் மூலம் சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனாநோய்த்தொற்று பரவல் காரணமாக 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்த நாட்டுநாடாளுமன்றக் கூட்டம், கடந்த மே 5ஆம் திகதி ஆரம்பமாகியது.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தின் இறுதியில், ஹொங்கொங்  தொடர்பான சர்ச்சைக்குரிய தேசியபாதுகாப்பு சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டது.

ஹொங்கொங்கில் சீனாவுக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதற்காக இந்த சட்டம் இயற்றப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த நகரில் தேசத் துரோகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறித்த சட்டமூலம் கம்யூனிஸ்ட்கட்சியின் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அந்த சட்டமூலத்தை ஆய்வு செய்த நிலைக்குழு, சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு ஒப்புதல் அளித்தது. அதையடுத்து அந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டமூலத்தில் பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாட்டுத்தலையீடுகள், ஹொங்கொங் நகரில் பயங்கரவாதத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எதிரானஅம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

முன்னதாக, ஹொங்கொங் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மூலத்துக்கு எதிர்ப்புதெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கிய போராட்டங்கள்,அந்த சட்டமூலம் காலாவதியான பிறகும் தொடர்ந்து தீவிரமடைந்து வந்தன.

அந்தப் போராட்டங்களை பிரித்தானியா,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூண்டி விடுவதாக சீனா குற்றம் சாட்டி வந்தது. மேலும்,போராட்டங்களின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை பயங்கரவாத நடவடிக்கைகளோடு சீனாஒப்பிட்டது.

இந்தச் சூழலில், சீன நாடாளுமன்றத்தில் தற்போது இயற்றப்பட்டுள்ள ஹொங்கொங் தொடர்பான புதிய தேசியபாதுகாப்பு சட்டத்தில், வெளிநாட்டுத் தலையீடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள்ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்கள் இடம்பெற்றுள்ளாது குறிப்பிடத்தக்கது.