
விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவிப்பு
கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி பணத்திற்காக விற்கப்பட்டது என அப்போதைய விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளமை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் கே டி எஸ் றுவன்சந்துறு இதனை தெரிவித்துள்ளார்.