
கொவிட்-19 எச்சரிக்கை நிலை மூன்றாம் நிலைக்கு குறைந்துள்ளது!
பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் எச்சரிக்கை நிலை, நான்கில் இருந்து மூன்றாம் நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நிலை கீழ், வைரஸ் இப்போது பொது புழக்கத்தில் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவது இருக்கக்கூடும்.
முன்னர் அதாவது, நான்காம் எச்சரிக்கை நிலையில் அதிக அல்லது அதிவேகமாக பரவும் அபாயம் இருப்பதாக கருதப்பட்டது.
இந்த மாற்றம் நாட்டிற்கு ஒரு பெரிய தருணம் என்றும், அரசாங்கத்தின் திட்டம் செயற்பட்டு வருவதாகவும் சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
கூட்டு உயிரியல்பாதுகாப்பு மையத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து அச்சுறுத்தல் அளவைக் குறைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான தலைமை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம் ஐந்து கொரோனா வைரஸ் (கொவிட்-19) எச்சரிக்கை நிலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.