மகிந்தவை திடீரென சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்! காரணம் என்ன?
ஸ்ரீலங்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பேக்லெய், பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வார ஆரம்பத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.