வவுனியாவில் குளம் உடைப்பெடுத்து பல ஏக்கர் வயல் நாசம்
வவுனியா ஊற்றுக்குளம் உடைப்பெடுத்துள்ள நிலையில் பல ஏக்கர் வயல் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் பெய்த கடும் மழையின் காரணமாக நெடுங்கேணி பகுதியில் உள்ள குறித்த குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்த நிலையிலேயே குளம் உடைப்பெடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விவசாய திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



