
பாவித்த முகக்கவசம் மற்றும் கையுறைகளை அப்புறப்படுத்துவது எப்படி? வெளியானது அறிவித்தல்
பயன்படுத்தப்படும் முகக்கவசம் மற்றும் கையுறைகளை உரியமுறையில் அப்புறப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி பொதுமக்களின் சுகாதார நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவை அப்புறப்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரும் கொவிட் 19 தாக்கத்திற்காக பயன்படுத்தப்படும் முகக்கவசம் மற்றும் கையுறைகளை எந்தவொரு காரணத்திற்காகவும் அன்றைய தினம் கழிவுப்பொருளுடன் இணைக்கவேண்டாமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
72 மணித்தியாலங்கள் கடந்த பின்னரே அவற்றை கழிவுப்பொருட்களோடு இணைக்க வேண்டும். தமது வீடுகளிலே அவற்றை வைத்திருக்க வேண்டும்.
கழிவுப்பொருட்களோடு இணைக்கும் போது பிரத்தியேகமாக மஞ்சள் பையொன்றில் அவற்றை இடவேண்டும். அதுதான் எந்தவொரு கொவிட் 19 க்குமான கழிவுப்பொருளை நகரசபையிடம் கையளிக்கும் முறை.
இந்நிலையில் தொற்றாளர் அல்லது முழுக்குடும்படும் தொற்றாளர்களாக இருந்தாலும், குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக இருந்தாலும். அங்குள்ள வீடுகளிலுள்ள கழிவுகளை மஞ்சள் பைகளில் அல்லது மஞ்சள் நிற அடையாளமிடப்பட்ட பைகளில் வேறுபடுத்த வேண்டும். உக்கும் பொருட்கள் வேறாகவும் உக்காத பொருட்கள் வேறாகவும் வேறு பைகளில் இடப்படவேண்டுமெனவும் அறிவுறுத்ப்பட்டுள்ளது.