
காட்டு யானையிடமிருந்து மயிரிழையில் உயிர்த்தப்பிய வனவிலங்கு அதிகாரிகள்
அனுராதபுரம்-ரன்மல்கஹ-வேவெல்கெடிய பகுதியில் காட்டு யானையை விரட்டும் பணியில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், அவர்கள் பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது காட்டு யானை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (12) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்பதோடு, அவர்களது வாகனத்திற்கு அதிகளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.