இராணுவத் தளபதியின் புதிய முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி

இராணுவத் தளபதியின் புதிய முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான மோதரை பகுதியில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ட்ரோன் கெமரா மூலம் முதன்முறையாக கண்காணிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து சட்டங்களை மீறியதற்காக 15 பேர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறப்பு நடவடிக்கைகள் இன்று முதல் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடங்கப்படும் என்று பொலிஸார் முன்னர் கூறியிருந்தனர்.

இலங்கை விமானப்படையின் உதவியுடன் முதல் முறையாக இராணுவத்தில் “ட்ரோன் படைப்பிரிவை” ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இன்று இந்த படைப்பிரிவின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த ட்ரோன் படைப் பிரிவின் மூலம் வான் பரப்பு ஊடாக நிலத்தை கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, ஸ்ரீலங்கா விமானப்படை மற்றும் கடற்படையினருக்கு இதன் ஊடாக ஒத்துழைப்புகளை வழங்க உள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.