பொது சுகாதார பரிசோதகர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை...!

பொது சுகாதார பரிசோதகர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை...!

கொழும்பில் உள்ள மக்கள் குடியிருப்புகளில் தங்கியுள்ள நபர்கள் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காவிடின் பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் குடியிருப்பு தொகுதியில் தங்கியுள்ள சிலர் சுகாதார வழிகாட்டுதல்களை சற்றும் பொருட்படுத்தாது செயற்படுவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொது செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே அனைவரும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றுதல் அவசியமாகும்.

அவ்வாறு பின்பற்றி கொவிட்-19 பரவலை நாட்டில் இருந்து இல்லாது செய்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்குரனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் வரையில் 12 கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குருநாகல் பகுதியில் வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு சேவைக்கு பணியாளர்களை மீள அழைப்பதற்காக அந்த பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

35 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவர்களில் 12 பேர் கொவிட்19 தொற்றுறுதியானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்புடையவர்கள் நேற்றைய தினம் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.