
10 மாதங்களில் 129 மில்லியனா..? மதுவரி திணைக்களம் வெளியிட்ட தகவல்
2020 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், மதுவரி திணைக்களத்தினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 129 மில்லியன் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ப்பட்ட 32 ஆயிரத்து 826 சுற்றிவளைப்புகளில், 32 ஆயிரத்து 789 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 3 ஆயிரத்து 297 பேர் பெண்களாவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், பிரசித்தமான மற்றும் சன நடமாட்டமுள்ள பகுதிகளில் புகைத்தலில் ஈடுபடுவர்களை கைதுசெய்ய 281 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருப்பவரகள் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களைப் கைதுசெய்ய ஆயிரத்து 542 சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.