
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 194 இலங்கையர்கள்..!
கொரோனா காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த 194 இலங்கையர்கள் இன்று (20) அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 2 விசேட விமானங்களின் ஊடாகவே இவர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.