கொரோனா பரவலைத் தடுக்க கடுமையான சட்டங்கள்..!!

கொரோனா பரவலைத் தடுக்க கடுமையான சட்டங்கள்..!!

கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகள் கடுமையான சட்டங்களை விதிப்பதற்குத் தீர்மானங்கள் மேற்கொண்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒஸ்ரியா, கிரீஸ், இத்தாலி மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகளில் பாடசாலைகள் மற்றும் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒஸ்ரியா நாட்டு அதிபர் தெரிவித்த கருத்தில் குறித்த வியாபார நிலையங்கள் மற்றும் பாடசாலைகளிலிருந்து தொற்றாளர்கள் நூற்றுக்கு 77விகிதமான தொற்றாளர்களை இனங்காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கிரீஸ் நாட்டில் தேசிய சுகாதாரத்திற்குச் சவாலாக தொற்றாளர்கள் இனங்காண்பதை அடுத்து அந்நாட்டின் அனைத்து வியாபார நிலையங்களும் மூடுவதற்கும், இரவு நேரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இத்தாலி நாட்டின் கெம்பேனிய பிரதேசத்தை கொரோனா அவதானப் பகுதி எனச் சிவப்பு மண்டலமாக அந்நாட்டு அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது.

அந்தப் பகுதியில் 86மில்லியன் சனத்தொகையுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,144,000 தாண்டியுள்ளதாகவும் கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 44ஆயிரத்து 683 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.