மஞ்சள் தூள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் 50 கோடி ரூபாய் நட்டம்...!

மஞ்சள் தூள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் 50 கோடி ரூபாய் நட்டம்...!

இலங்கையில் மஞ்சள் தூள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வர்த்தகர்களுக்கு சுமார் 50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தமிழகம் ஈரோடில் அதிகளவில் மஞ்சள் வர்த்தகம் இடம்பெறுகின்ற நிலையில், அங்கிருந்து கடந்த காலங்களில் இலங்கைக்கு மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

எனினும் இலங்கையில் தற்போது மஞ்சள் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளதால், அது தமிழகத்தில் உள்ள மஞ்சள் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களை கடுமையாக பாதித்திருப்பதாக, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் எம். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அங்கிருந்து வருடாந்தம் சுமார் 7500 டன் மஞ்சள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.